Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி பேலஸில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வந்தது.
இந்த கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட கழக பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வழிகாட்டு குழுவுக்கு அதிகாரம் அளித்தல் கூட்டணி கட்சிகளை உறுதி செய்வதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன எதிர்பார்க்கப்படுகிறது